குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா.
குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.;
பரமத்திலூேர், ஏப்.23: பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை காலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தக் பக்தர்கள் குடங்களுடன் ஊர்வலமாக * கோவிலை வந்து அடைந்தனர். பின்னர். தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை பெண்கள் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், பெண்கள் மாவிளக்குடன் ஊர்வலமாக வந்து மாவிளக்கு பூஜையும் செய்தனர். முன்னதாக மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு வான வேடிக்கை நடைபெற்றது. இன்று காலை கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடும். நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.