பாட்டியை வெட்டிக்கொன்ற வழக்கில் பள்ளி மாணவனை கைது.
வேலகவுண்டம்பட்டி அருகே பாட்டியை வெட்டிக்கொன்ற வழக்கில் பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.;
பரமத்திவேலூர், ஏப்.24: வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொண்டாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாவாயி (வயது 70). இவரது மகன் மோகன் (43), லாரி டிரைவர். இவரது 16 வயதுடைய மகன் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாணவன் தனது பாட்டி பாவாயி உண்டியலில் வைத்திருந்த சுமார் ரூ.7 ஆயிரம் பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்ததாகவும், இது குறித்து பாவாயி தனது மகன் மோகனிடம் கூறியுள்ளார். மோகன் உண்டியல் பணத்தை எடுத்து செலவு செய்த தனது மகனை கண்டித்துள்ளார். இந்த நிலையில் சிறுவன் சனிக்கிழமை மாலை வீட்டிற்கு வந்தான். பாட்டியின் மீது இருந்த கோபத்தில் மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாவாயியை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த போலீ சார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவம் னைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் தலைமறைவான சிறுவனை வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திராணி, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். மானத்தி பிரிவு ரோடு சென்ற போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டு இருந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவன் பாட்டியை கத்தியால் வெட்டிக் கொலை செய்த மாணவன் என தெரியவந்தது. அதனையடுத்து மாணவனை வேலகவுண்டம்பட்டி போலிசார் கைது செய்து சேலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.