தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று (ஏப்.26) தென்கரைப் பகுதியில் ரோந்து பணி கொண்டனர். அப்பொழுது லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சின்னராஜ் என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சின்னராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.