ராமநாதபுரம் கோவில் திருவிழா முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது
கமுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு 4 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம், 53 மாட்டு வண்டிகள் பங்கேற்பு;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பம்மநேந்தல் கிராமத்தில் ஸ்ரீ குருநாத சுவாமி 49 ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் பெரியநாச்சி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று காலை 4 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது பெரியமாடு வண்டி பந்தயத்தில் 6 மாட்டு வண்டிகள், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 மாட்டு வண்டிகள், பூஞ்சிட்டு மாட்டு வண்டியில் 22 வண்டிகள், தேன் சிட்டு மாட்டு பந்தயத்தில் 15 வண்டிகள் என மொத்தம் 53 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இந்த மாட்டு வண்டி போட்டியை பொதுமக்கள் சாலையின் இருபுறங்களும் நின்று மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.