உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர்
திருப்பத்தூர் அருகே கல்குவாரியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதியினை வழங்கினார்;
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மல்லாக்கோட்டை தனியார் கல்குவாரியில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பாறைமற்றும் மண் சரிவு விபத்தின் போது உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.04.00 இலட்சமும், தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.01.50 இலட்சமும் மற்றும் தனியார் கல் குவாரி நிறுவனத்தின் சார்பில் தலா ரூ.05.00 இலட்சமும் என மொத்தம் தலா ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரண நிதியுதவியினை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்