பையூர் எம்ஜிஆர் நகரில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்.
ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகரில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.;
ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகரில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகரில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றதில் பேரவை மாவட்ட செயலாளர் பாரி பி.பாபு தலைமை தாங்கினார். அனைவரையும் தெற்குஒன்றியசெயலாளர் ஜி.வி.கஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலதிட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். உடன் மாவட்டஇணைசெயலாளர் வனிதாசதீஷ், ஒன்றியஅவைத்தலைவர் சேவூர் ஜெ.சம்பத், பேரவை ஒ்ன்றியசெயலாளர் புங்கம்பாடி சுரேஷ், நகரபேரவைசெயலாளர் பாரதிராஜா, பையூர் முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் சரவணன், மணிமேகலை, முன்னாள் ஒன்றியகவுன்சிலர் செல்விபழனி, ஆரணி நகரமன்ற உறுப்பினர்கள் சுதாகுமார், விநாயகம் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.