பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வழிபாடு

மணல்மேடு புற்றடி மாரியம்மன் கோவிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து வழிபாடு செய்தனர்;

Update: 2025-05-26 03:55 GMT
திருவாருர் அருகே கல்யாணமஹாதேவி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மணல்மேடு புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. வைகாசி திருவிழா தொடங்கி நாள்தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்ற வரும் நிலையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சிவன் கோவில் கிருஷ்ணன் குளத்திலிருந்து 121 தாம்பூலங்களில் பல வகையான பூக்கள் பழங்களை ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு சமர்பித்தும் நாட்டுப்புற பாடலுக்கு கும்மிஅடித்து வழிபட்டனர்.

Similar News