உலக பட்டின தினத்தை ஒட்டி சாலையோர மக்களுக்கு உணவு

தமிழக வெற்றிக்கழக இளைஞரணி சார்பில் உலக பட்டின தினத்தை ஒட்டி சாலையோர மக்களுக்கு உணவு;

Update: 2025-05-30 07:01 GMT
தமிழக வெற்றி கழக இளைஞர் அணி சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி சாலையோர மக்களுக்கு உணவு தாராபுரத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி மற்றும் தாராபுரம் நகர இளைஞரணி சார்பாக நேற்று முன்தினம் உலக பட்டினி தினத்தை யொட்டி பஸ் நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர், நகர செயலாளர் சார்லி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நகர இணைச் செயலாளர் ரமேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் அபுத்தாஹீர், துணை அமைப்பாளர் ஜாகீர், முஜிபூர் ரஹ்மான், தமிழரசன் ஆட்டோ முஜி, சுரேஷ், சுல்தான் உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News