உத்தமபாளையம் இ.பி. காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. இந்த காலனியில் சாக்கடை கட்டுவதற்காக தோண்டிய பேரூராட்சி நிர்வாகம், அதனை அப்படியே விட்டு சென்றது. இதனால், மண் தரையாக இருந்த தெருக்கள் தற்போது மழையால், சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், தெருவில் செல்லும் முதியோர், குழந்தைகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.