பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தை சோ்ந்தவா் முருகேசன் (45). இவர் நேற்று (ஜூன்01) பெரியகுளம் சாலையில் வாய்க்கால் பாலம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது இவருக்கு பின்னால் வந்த கிரேன் வாகனம் முருகேசன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து ஜெயமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் சூர்யபிரகாஷை கைது செய்தனர்.