தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவர் நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக நின்று இருந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் கருப்பையா மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று (ஜூன் 01) வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.