பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைந்திருக்கும் நான் கூடத்தில் 301 மனுக்கள் பெறப்பட்டது.;
பெரம்பலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (02.06.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைள் தொடர்பாக 301 மனுக்கள் பெறப்பட்டது. ஒவ்வொரு மனுவின் மீதும் தனிக்கவனம் செலுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்தவார மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சு.சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ்குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் வி.வாசுதேவன், தாட்கோ பொது மேலாளர் கவியரசு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.