சின்னமனூர் காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜூன்.2) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அசாம் மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்ற ரூ.2400 பறிமுதல் செய்த போலீசார் நாகராஜ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.