கடமலைக்குண்டு காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜூன்.2) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் அருகே பால்பாண்டி என்பவர் பொதுமக்களை ஆபாசமாக பேசி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார். போலீசார் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.