கோடாங்கிபட்டி அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் படுகாயம்

விபத்து;

Update: 2025-06-03 13:17 GMT
கோடங்கிபட்டியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் தனது நண்பர் ரமேஷ் உடன் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் தேனி சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். பழனிசெட்டிபட்டி அருகே வந்த போது சிவனேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்த பைக் மீது இவரது பைக் மோதியது. இதில் ஜெயப்பிரகாஷ், ரமேஷ் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்

Similar News