பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தலை காயத்திற்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நேற்று முன்தினம் தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துள்ளார். அதனை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். திருட்டு குறித்து தென்கரை போலீசார் நேற்று (ஜூன் 3) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.