தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் குமுளி மலைப்பாதையும் ஒன்றாகும். இந்த மலைச்சாலையில் உள்ள மரங்கள் சாய்ந்தும் மண் சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்துற்கு இடையூறாக உள்ளது. மாவட்டத்தில் தற்பொழுது பருவமழை துவங்கி உள்ள நிலையில், மலைச்சாலையில் உள்ள ஆபத்தான மரங்களை கண்டறிந்து அவற்றை அகற்றவும். மண்சரிவு ஏற்படும் நிலையில் உள்ள பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது