போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (65). இவர் கடந்த மாதம் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போடி தாலுகா போலீசார் நேற்று (ஜூன் 3) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.