சுற்றித்திரிந்த பெண்ணை மீட்டு அவரின் உறவினருடன் ஒப்படைப்பு.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் நகரப் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை மீட்டு வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்து அவர்கள் சிகிச்சை அளித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்;
பெரம்பலூர் நகரப் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை மீட்டு அவரின் உறவினருடன் ஒப்படைப்பு. பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட *காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மீட்டு கருணை இல்லத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த எலிசபெத் (53) ( என்ற பெண்ணை கடந்த 24.09.2024- ம் தேதி மீட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கருணை இல்லத்தில் மனநல மருத்துவர் மூலம் மேற்படி நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 05.06.2025-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மருதமுத்து மற்றும் சித்ரா, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா, மனநல மருத்துவர் அசோக் ஆகியோர்கள் மேற்படி நபரை அவருடைய மகன் இமானுவேல், கொள்ளேகால்,மைசூர், கர்நாடகா மாநிலம். என்பவரிடம் நல்ல முறையில் ஒப்படைத்தனர்.