தேனி அருகே வலையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதி. இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வரக்கூடிய நிலையில் நேற்று முன் தினம் இவரது வீட்டின் அருகே இருந்த ஆட்டு கொட்டகையில் இருந்த நாற்பதாயிரம் மதிப்பிலான நான்கு ஆடுகள் திருடப்பட்டது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் நேற்று (ஜூன் 04) வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.