போடி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நேற்று முன் தினம் உறவினரின் நிகழ்விற்காக தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். மீண்டும் நேற்று (ஜூன் 4) வீடு வந்து பார்த்தபொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நான்கு கிராம் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.