மீமிசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் பறிமுதல்

குற்றச் செய்திகள்;

Update: 2025-06-17 05:30 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த நட்டாணிபுரசக்குடியைச் சேர்ந்தவர் ஜோஹா பீட்டர் (45). இவர் நட்டாணி புரசகுடி அருகே டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மீமிசல் காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 1/2 யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Similar News