பேரக் குழந்தைகளுடன் மகள் மாயம் தாய் புகார்.
மதுரை திருமங்கலம் அருகே பேரக்குழந்தைகளுடன் மகள் மாயம் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேரையூர் டி. கல்லுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த செல்லாயி என்பவரின் மகள் ராஜேஸ்வரி (23), 2 வயது, மற்றும் 4 மாத பேரக்குழந்தைகளுடன் கடந்த 14ம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று இரவு செல்லாயி டி. கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.