ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!
மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.;
வேலூர் பில்டர்பெட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.அதன்பேரில் மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று (ஜூன் 19) நடந்தது. 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.