ஆர்வமுடன் யோகா செய்து காட்டிய ஆளுநர்
மதுரையில் தமிழக ஆளுநர் மாணவர்களின் முன்னிலையில் யோகா செய்து விளக்கம் அளித்தார்;
மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் தமிழக ஆளுநர் ஆா.என். ரவி கலந்து கொள்ளும் 11 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன்.21) வேலம்மாள் கல்வி குழும நிறுவனத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா யோக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ரவி மாணவர்களின் முன்னிலையில் யோகா செய்து காட்டினார். யோகா செய்வதால் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும் என்று கூறினார். மாணவர்கள் ஆளுநர் யோகா செய்வதை ஆர்வமுடன் உன்னிப்பாக கவனித்தனர்.