ராசிபுரம் நகர ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் மாதாந்திர கூட்டம்..
ராசிபுரம் நகர ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் மாதாந்திர கூட்டம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர ஓய்வு "பெற்ற அலுவலர் சங்கம்" சார்பில் மாதாந்திர கூட்டம் பூக்கடை வீதியில் உள்ள "ஜாகை" மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நகர தலைவர் க. தாளமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சங்கச் செயலாளர் k. சுப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். சங்க துணைச் செயலாளர் R. நஞ்சப்பன் பொருளாளர் குணசேகரன், துணைச் செயலாளர் B. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய உறுப்பினராக "நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருந்தாளராக" பணிபுரிந்த A. ராஜு அவர்கள் "பணி ஓய்வு பெற்று" சனிக்கிழமை முதல் "ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தில் இணைந்தார். அவர்களை வாழ்த்தி தலைவர் தாளமுத்து பேசினார். உடன் உறுப்பினர் அனைவரும் வாழ்த்தி பேசினார்கள். சங்க விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் பேசப்பட்டது. இதில் CSR@R. சுந்தரம் முத்துசாமி, மற்றும் பலர் சங்க வளர்ச்சியை பற்றி பேசினார்கள். முடிவில் சோமசுந்தரம் அனைவருக்கும் நன்றி கூறினார்.