கள்ளக்குறிச்சி எஸ்.பி.,ரஜத்சதுர்வேதி உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., ரமேஷ், பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு டி.எஸ்.பி.,ஜெயக்குமார் மேற்பார்வையில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு போலீஸ் சார்பில் நாட்டுப்புற கலைக் குழுவினர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.