வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துாய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் சிவா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் தீபா அய்யனார் முன்னிலை வகித்தார். முகாமில், 36 ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காய்ச்சல், இருமல் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.