தங்க கவச அலங்காரத்தில் ஆதி சிவன்
மதுரை தவிட்டு சந்தை பகுதியில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது;
மதுரை தவிட்டுசந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் திருக்கோவிலில் இன்று (ஜூலை.8) வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் ஆதி சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.