ஆம்பூர் அருகே தொடர்மழையை பயன்படுத்தி பாலாற்றில் திறந்து விடப்பட்ட தோல் கழிவுநீர் துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு*
ஆம்பூர் அருகே தொடர்மழையை பயன்படுத்தி பாலாற்றில் திறந்து விடப்பட்ட தோல் கழிவுநீர் துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு*;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தொடர்மழையை பயன்படுத்தி பாலாற்றில் திறந்து விடப்பட்ட தோல் கழிவுநீர் துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு* திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது, இதனை பயன்படுத்தி வாணியம்பாடியில் உள்ள சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், நேரடியாக பாலாற்றில் திறந்து விடுவதால், மாராப்பட்டு பகுதியில் பாலாறு நுரை பொங்கி ஓடுகிறது.. இந்நிலையில் பாலாற்றில் தோல் கழிவுநீரை கலக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்த நிலையில், பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பது தொடர்கதையாகி வருவதாகவும், மேலும் பாலாற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், பாலாறு துர்நாற்றத்துடன் ஓடுவதாகவும், மேலும் பாலாற்று படுக்கையில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் கால்நடைகள் கூட குடிக்க முடியாத அளவிற்கு மிகவும் மாசடைந்து வருவதாகவும், விவசாய நிலங்களும் இதனால் மிகுந்த பாதிப்படைந்து வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் பாலாற்றில் தோல் கழிவுநீரை கலக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..