அகவை முதிர்ந்த தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை உயர்த்தப்பட்டதற்காக தமிழக அரசுக்கும் தமிழ் வளர்ச்சி துறைக்கும் நன்றி தெரிவித்து நேற்று தமிழ் வளர்ச்சி துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதனை நெல்லை கவிஞர்கள் சந்தித்து நினைவு பரிசு வழங்கினர். இதில் கவிஞர்கள் சுப்பையா,இரா.துரை முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.