காலை உணவு திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு!
வேலூரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உமா இன்று ஆய்வு மேற்கொண்டார்.;
வேலூர் மாநகராட்சி அரியூர் இந்து தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உமா இன்று (ஜூலை 25) ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி உட்பட பலர் உடன் இருந்தனர்