ரவுண்டானா அருகே பிளாட்பாரத்தில் தூங்கி இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.

ரவுண்டானா அருகே பிளாட்பாரத்தில் தூங்கி இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.;

Update: 2025-07-28 04:20 GMT
ரவுண்டானா அருகே பிளாட்பாரத்தில் தூங்கி இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. நாமக்கல் மாவட்டம் , ராசிபுரம் , முதலியார் தெருவை சேர்ந்தவர் சண்முகம் வயது 55. இவர் ஜூலை 25ஆம் தேதி இரவு 11:50 மணியளவில் கரூர் பேருந்து நிலையம் மனோகரா கார்னர் அருகே உள்ள பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று சண்முகத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சண்முகத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சண்முகத்தின் மகள் நந்தினி வயது 19 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட கரூர் காவல்துறையினர் மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது ? அந்த வாகனத்தின் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News