புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கோவிலூரை சேர்ந்தவர் கருப்பையா (40). இவர் ஆலங்குடி கடை வீதியில் நடந்து சென்ற போது அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த அடையாளம் தெரியாத நபர் மோதிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.