புதுக்கோட்டை மாவட்டம் வளவம்பட்டியில் கனரக வாகனம் மோதி சங்கர் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் உடலை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.