ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரியாற்றில் 20,000 கனஅடியாக நீர் வரத்து சரிவு, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி;

Update: 2025-08-01 04:56 GMT
பென்னாகரம் தொகுதி கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரியாற்றில் சமீப நாட்களாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக நீர்வரத்து சரிவதும் அதிகரிப்பதுமாக காணப்படுகிறது இன்று ஆகஸ்ட் 01 காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நீர்வரத்து செய்துள்ளதால் ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது ஆனால் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News