திமிரி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை;

Update: 2025-08-01 06:34 GMT
திமிரி அருகே மோசூர் கிராமம், ரோட்டு தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சுமித்ரா (வயது 18). இவர் விளாப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை தமிழ் படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தவுடன் வீட்டின் அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திமிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதையடுத்து திமிரி போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News