உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்த செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்த செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்;
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாட்டுநல்லூர் ஊராட்சி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார்.இம்முகாமில் 15 துறைகள் சார்பில் 46 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு தீர்வுகாண பரிந்துரை செய்யப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு கலைஞர் உரிமைத்தொகை,பட்டா,குடும்ப அட்டை,மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அளித்தனர். அதனைத்தொடர்ந்து தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் மற்றும் முதியோருக்கு மருத்துவ பெட்டகங்களை மற்றும் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு விதை தொகுப்புகள், மின்சாரத்துறை சார்பில் மின் இணைப்பு ஆனை உள்ளிட்டவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருதலைவர் உதயா கருணாகரன்,துணைத் தலைவர் A.V.M. இளங்கோவன், காட்டாங்கொளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கே.பி.இராஜன்,ஊராட்சி மன்ற தலைவர் பகவதி நாகராஜன்,ஒன்றிய கவுன்சிலர் சித்ரா ரவி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன்,மீனாட்சி,வட்டாட்சியர் பூங்கொடி, மற்றும் துறைச் சார்ந்த அதிகாரிகள்,அரசு ஊழியர்கள் கழக நிர்வாகிகள் ,ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபு,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.