மீனவ அமைப்புகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்: காளியம்மாள் பேட்டி!

மீனவ அமைப்புகளுக்கு 13 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்: காளியம்மாள் பேட்டி!;

Update: 2025-08-05 17:02 GMT
தமிழக சட்டமன்ற தேர்தலில் மீனவ அமைப்புகளுக்கு 13 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காளியம்மாள் வலியுறுத்தினார்.. தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா ஆலய திருவிழாவின் பத்தாம் திருவிழாவான இன்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் காளியம்மாள் கலந்து கொண்டார். பின்பு தேர்மாறன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சியினர் அவர்கள் கட்சியின் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக மீனவ மக்களின் வாக்குகளை பெற தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சியினர் ஒட்டுமொத்தமாக வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மண்ணிலிருந்து நான் சொல்வது நெய்தல் மக்களுக்கு புத்தக வடிவில் தான் அதிகாரம் உள்ளது. அதையும் தாண்டி மக்களின் பிரச்சனைகள் அதிகம். இதுவரைக்கும் எந்த தேர்தலிலும் இந்த மக்களுக்கு அதிகாரம் இல்லை. இதுவரை கடலோர மக்களுக்கு அவளுடைய உரிமை மறுக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் கடலோர மக்களுக்கு மீனவ அமைப்புக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதியில் கடலோர மீனவ மக்களின் வாக்குகள் அதிகமாக உள்ளது. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மீனவ மக்கள் இருக்கின்றனர். எந்தெந்த தொகுதியில் கடலோர மக்களின் வாக்கு அதிகமாக உள்ளதோ அந்த தொகுதியில் மீனவர்களை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் கடலோர மாவட்டம் 13 அல்லது 14 சட்டமன்ற தொகுதியில் மீனவ மக்களை வேட்பாளராக நிறுத்த வேண்டும். மீனவ மக்கள் அவர்களுக்கான மீன்பிடித் துறைமுகம் கேட்டால் வாய்ப்பு வழங்குவது கிடையாது. மக்களின் கோரிக்கை நிறைவேற்றுவது கிடையாது தனியார் துறைமுகங்கள் கடற்கரைப் பகுதியில் அமைப்பது மிகவும் தவறான செயலாகும். மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் செயலாகும். கடலோர மக்களை அப்புறப்படுத்துவதற்கான செயலாகும். மத்திய அரசு ஒரு மோசமான திட்டத்தை கொண்டு வந்தால் அதனை தமிழக அரசு எதிர்க்கிறது. ஆனால் இதில் ஏன் மௌனம் காத்து வருகிறது. கடற்கரைப் பகுதியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், துறைமுகங்கள் அமைப்பதும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைக்கும் செயலாகும். மணப்பாடு பகுதியில் பாரம்பரிய புனிதமான தேவாலயம் உள்ளது. அந்த இடம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய இடம் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைக்கும் வகையில் அங்கு ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மீனவ இனத்திலிருந்து ஒரு அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் திமுக அரசின் மீன்வளத் துறை அமைச்சர் மீனவர்களை சேர்ந்தவர் இல்லை. மீனவ மக்களுக்கு அடிப்படை வசதிகள் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். நான் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. எந்த அரசியல் கட்சி மீனவ அமைப்புக்கு ஆதரவு அளித்தாலும் வேட்பாளராக நிறுத்தினாலும் எனது ஆதரவு உண்டு என்றார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டபோது "அது இந்த அமைப்புகள் ஒன்று கூடி முடிவு செய்வார்கள் அதன் அடிப்படையில் எனது முடிவு இருக்கும்" என்று கூறினார்.

Similar News