போச்சம்பள்ளியில் கொப்பரை தேங்காய் ஏல மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.
போச்சம்பள்ளியில் கொப்பரை தேங்காய் ஏல மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கொப்பரைதேங்காய் ஏல மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.விவசாயிகளின் தேவைகள், சந்தை நிலவரத்தை குறித்து கேட்டறிந்து, சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.