அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிகுமார் மற்றும் போலீசார் நேற்று வேடல், காந்தி நகர் கூட்ரோடு, சாலை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காந்தி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரனை நடத்தினர். அதில் அவர் வேடல் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 66) என்பதும் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்ப தற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.