ஓசூர்: நடந்து சென்றவர் மீது ஆம்னி பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

ஓசூர்:நடந்து சென்றவர் மீது ஆம்னி பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு;

Update: 2025-08-06 11:15 GMT
தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (64) டிரைவர். சொந்த வேலைக்காக ஓசூர் வந்தார். நேற்று முன்தினம் இரவு ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் குமுதேப்பள்ளி அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக சென்ற ஆம்னி பேருந்து மகேந்திரன் மீது மோதியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அட்கோ போலீசார் மகேந்திரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

Similar News