பெண்ணிடம் அத்துமீறிய கூலித் தொழிலாளி கைது

சுசீந்திரம்;

Update: 2025-08-07 05:29 GMT
குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சார்ந்தவர் சந்திரன் மனைவி செல்வ லட்சுமி ( 35 )இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது குழந்தை இல்லை. இந்நிலையில் இவரது கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்து வருகின்றார். நேற்று ஒரு தென்னந்தோப்பில் விறகு எடுக்க செல்வ லட்சுமி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த புத்தளம் உத்தாண்டன் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த சந்திரன் என்பவர் அவர் கையை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசி உள்ளார். இதனால் செல்வ லட்சுமி கூச்சல் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்து சந்திரன் ஓடி வந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துதப்பி சென்றுள்ளார். இதுகுறித்து செல்வ லட்சுமி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News