ராணிப்பேட்டையில் குடிமைப் பணிகள் தேர்வு

ராணிப்பேட்டையில் குடிமைப் பணிகள் தேர்வு;

Update: 2025-08-09 03:31 GMT
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள், குடிமைப் பணிகள் தேர்வுகள் (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) வருகிற 17, 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 தேர்வு கூடங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 781 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர் விற்காக கூடுதல் சிறப்பு பஸ் வசதிகள், தடையில்லா மின்சாரம், போலீஸ் பாதுகாப்பு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு www.tnpsc.gov.in என்ற தேர்வா ணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக் கூடத்திற்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள்ளாகவும், பிற்பகல் 1 மணி முதல் 2 மணிக்குள்ளாகவும் தேர்வர்கள் வருகை புரிய வேண்டும். தாமதமாக வருபவர்கள் தேர்வு கூடத்திற்குள் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News