மதுராந்தகம் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

மதுராந்தகம் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-08-09 12:21 GMT
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிக்குவருகின்ற ஆகஸ்ட் 22, 23ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தருவதையொட்டி மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி, செய்யூர் சட்டமன்ற தொகுதி, திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகளின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் கழக செய்தித் தொடர்பாளர் பா.வளர்மதி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் சீனிவாசன் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் முன்னிலையிலும் நடைபெற்றது.. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதியை சார்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள், செயலாளர்கள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்..

Similar News