குமரி மாவட்டம் மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் ஆண்டனி. இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சந்திரகலா. இவர்கள் மகன் சாகித் ஜெட்லி (20). இவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சாகித் ஜெட்லியை விசாரிக்க கடந்த 28ஆம் தேதி அதிகாலை அவரது வீட்டிற்கு சைபர் கிரைம் போலீசார் மற்றும் கருங்கல் போலீசார் என மொத்தம் நான்கு பேர் சென்றனர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாகித் ஜெட்லி தப்பி ஓடினார். அவரது பாட்டி சூசை மரியாள என்பவர் கீழே விழுந்து இறந்தார். போலீஸ் தள்ளியதில் தான் சூசை மரியாள் இறந்தார் என்று குடும்பத்தினர் குற்றச்சாட்டி உடலை வாங்க மறுத்தனர். கருங்கல் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். நான்கு நாட்களுக்கு பின் நீதிமன்ற உத்தரவு படி உடலை வாங்கி சென்றனர். அவரது பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாகித் ஜெட்லியை நேற்று மாலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.