இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, எம்எல்ஏ பங்கேற்பு
இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, எம்எல்ஏ பங்கேற்பு;
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைவையாவூர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்களிடம் மனு அளித்தனர்.அதனை தொடர்ந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததன் பேரில் மலைவையாவூர் கிராமத்தை சேர்ந்த 35 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு கிராம பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் VG.குமரன்,ஒன்றிய அவைத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..