கோவையில் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை !

கோவையில் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை சூறையாடி சென்றுள்ளது.;

Update: 2025-08-12 06:37 GMT
கோவை, கோவை புதூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளது அறிவொளி நகர் அங்கு அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டபட்டு ஆயிரக் கணக்கான மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இதை அடுத்து அப்பகுதி பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிப்பதற்கு அண்ணாநகர் பகுதியில் நியாய விலை கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று அங்கு வந்த காட்டு யானை ஒன்று அந்த ரேஷன் கடையின் ஷட்டர் உடைத்து பொது மக்களுக்கு விநியோகிக்க வைத்து இருந்த அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை உண்டு, சூறையாடி, சேதப்படுத்தி சென்றது. ரேஷன் கடை ஷட்டர் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதிக்குள் யானை வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தாமல், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினரிடம் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News