குறு வட்ட அளவிலான தடகள போட்டி

போட்டி;

Update: 2025-08-14 04:20 GMT
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் குறு வட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டிகளுக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலுச்சாமி, கலாபன், ராமமூர்த்தி, பாரதியார் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் வேல்முருகன் வரவேற்றார்.இதில், 40க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். 14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 100, 200, 400, 800, 1,500 மற்றும் 3,000 மீட்டர் ஓட்டம், தடை தாண்டுத ல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Similar News