சேலத்தில் மாணவி தீக்குளித்து தற்கொலை

போலீசார் விசாரணை;

Update: 2025-08-14 09:13 GMT
சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகள் தீக்‌ஷா (வயது 14). மாணவி அங்கு உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று உள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் வெந்து உயிருக்கு போராடிய மாணவியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News